Sunday, 16 June 2013

குஜராத் அமைச்சர் 54கோடி ஊழல் நரேந்திர மோடி அரசை குறித்த அண்ணன் கைப்புள்ளையின் கண்டன பேருரை





சமிபத்தில் குஜராத்  சுரங்கத்துறை அமைச்சர் 54கோடி ருபாய் லஞ்ச வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார், இது குறித்து பொது கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணன் கைப்புள்ளையின் அனல் உரை,  






அண்ணன் கைப்புள்ளையின் உரை :


                                                                                                                      என்னய்யா ஆட்சி நடத்துற என்ன ஆட்சி நடத்துற  நீ , இல்ல தெரியாமத்தான் கேட்கறேன் என்ன ஆட்சி நடத்துற நீ, என்னமோ குஜாரத்துதான் முன்னேறிய மாநிலம் அங்கனத்தான் எல்லாமே முதலிடம் அப்படி இப்படின்னு பேசுன, செய்திய பார்த்தியா ஒரு அமைச்சர்  54 கோடி லஞ்சம் வாங்கி சிறை சென்றிருக்கிறார், இது கேவலமில்லையா, வெட்கமில்லையா அசிங்கமில்லையா, அவமானமில்லையா  சொல்லுங்க மோடி ,

அன்னையின் சீரிய வழிகாட்டுதலிலும்  மங்கூஸ் தலையரின்  ஆட்ச்சியில் இந்த நாட்டில் இப்படி வேட்க்க கேடான சம்பவத்தை உங்கள் ஆட்ச்சியில் உங்கள் குஜாராத்தில்  நடத்தி உள்ளீர்கள், மக்கள் எங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை சிந்திச்சி பார்க்க வேணாமா நீ,

அலைகற்றை ஊழல் தொடங்கி, ஆதர்ஷ்,காமன் வெல்த்,நிலக்கரி இப்படி நாங்கள் பலாயிரம் கோடி ருபாய் ஊழலை செய்து விட்டு அமைதியாக இருக்கிறோம், நீ என்னமோ 54 கோடி ருபாய் அமைச்சரை நீக்கி இருக்கிறாய் இதில் அவருக்கு 3 வருடம் தண்டனை வேறு, எங்க ஊரு கார்ப்பரேசன் அதிகாரி கூட இத விட அதிக  தொகை வாங்குகிறார் என்பதை அறிந்து கொள்,

காமன் வெல்த் ஊழலில் சிறை சென்ற கல்மாடி இப்போ ஓய்வெடுப்பது சொகுசுமாடி, அண்ணன் ஆ,ராசா அன்றும் இன்றும் வெள்ளை சட்டை புன்னகை மாறியதை கண்டதுண்டா நீ ,அட இது மட்டுமா நாங்க ஹேர் பின் முதல்  ஹெலிகாப்ட்டர்ல வரை பல்லாயிரம் கோடி  ஊழல்  செய்துவிட்டு ஊர்  பக்கம் அமைதியா  ஒதுங்கி அரசியல் தொழில் பண்ணிக்கிட்டு  இருக்கிறோம் நீ என்னடான்னா 54 கொடிக்கே இத்தன அலப்பரை பண்ற என்ன நெனச்சிகிட்டு இருக்க உன் மனசுல, 

உங்க ஊர்ல அரசியல்வாதிமட்டும்தான்யா ஊழல் செய்வான் ஆனா இங்க அரசியல் வாதி மட்டுமல்ல  மட்டுமல்ல, கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கானா பாடும் என்பதை போல, மன்னிக்கவும் கவி பாடும் என்பதை போல, அரசியலில் இல்லாத எங்க அன்னையின் மருமகன் கூட சர்வசாதரணமாக பல நூறு கோடிகளை அன்பளிப்பு பெற்றுள்ளார், இந்த வாழைப்பழ நாட்டு பணக்கார கம்பெனிகளிடமிருந்து, நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், ஊழலில் சிக்கி சுண்ணாம்பாகி இருக்கும்  தேசத்தில் இப்படி ஒரு செய்தி உலக அளவில் நமக்கு அவமானம்  இது , பல்லாயிரம் கோடி ஊழல் செய்தே பல்லிளித்து ஒட்டு கேட்டு வெற்றி பெரும் நமக்கு இந்த அமைச்சரும் இவரை காப்பாற்றாத மோடியும் அவமான சின்னம் என்பதை இங்கே அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்,நன்றி 


அண்ணனின் அனல் உரையை கேட்க்க வந்த மக்கள் கூட்டம்
(நம்புங்க சார் )



     

No comments:

Post a Comment