Saturday, 8 June 2013

என்னைய ஏன் கிக் பாக்சிங்க்ள தடை செஞ்சாங்கன்னா


நாங்கெல்லாம் நிக்குறது முக்குறது எல்லாமே ஒரு ஸ்டைல் 


நானெல்லாம் தமிழ் நாட்டுல இருக்கறதாலத்தான் மைக் டைசன், ஸ்பீக்கர் பைசன், இது மாதிரி கிக் பாக்சிங் பக்கிங்க இங்க வந்து எட்டிகூட பார்க்கலை,

கிக் பாக்சிங்கள நான் ஒரு சாம்பியன் அப்படிங்கறது பல பேருக்கு தெரியாது, ஏன் எனக்கு கூடத்தான், சென்னையில எங்க பாக்சிங் நடந்தாலும் மொதல்ல கொலகுத்து வாங்குறது நான்தான்,  ஒரு புள்ளபூச்சிய அடிக்கிரமே அப்படிங்கற இறக்கம் இல்லாத இந்த பயலுங்களால, அடிவாங்கி அடிவாங்கி என் உடம்பு ஸ்டீல் பாடி ஆகி போச்சு, சரி இப்படியே போயிகிட்டு  நமக்கு சரி வராது அப்படின்னு ஒரு கிக் பாக்சிங் போட்டியில செயிக்கிரதுன்னு இறங்கி களத்துல போயி நின்னா ஒரு பய பின்னாடிலேர்ந்து கத்துனான். ' சிங்கம் களம் இறங்கிடுச்சே ' சரி இந்த பாசக்கார பயலுக்கு போகும்போது ஒரு டீ தண்ணி வாங்கி  கொடுத்துட்டு போகலாம்னு திரும்பி யாருன்னு பார்த்துட்டு திரும்பறதுக்குள்ள,

 அந்த பன்னாட விட்டா பாரு ஒரு குத்து மூஞ்சி மேல,மண்டைக்குள்ள இருந்த அத்தனை ஸ்பேர் பார்ட்சும்  அப்படியே  உள்ளே ஒரு இடம் விட்டு இடம் மாறி ஓடி ஒளிஞ்சி விளாண்டு கடைசியா கொஞ்சம் அங்க அங்க வந்து செட்டில் ஆச்சு, அந்த அடியிலும் ஒரு துளி கண்ணீர் ஒரு சத்தம் விடலையே, கொஞ்சம் கண்ணுதான் கலங்கலா தெரிஞ்சிச்சு விடலை அந்த பன்னாடைய எட்டிகிட்டு மிரிச்சேன் பாரு அல்லையில, அப்படி ஒரு மிதி, ரெபிரீ கூட நான் கைய ஓங்கும்போது குனிஞ்சும் நகர்ந்தும் ஓடுறான் ஆனா இந்த பய மறுபடியும் ஓடி வந்து கிரிக்கெட்ல போர் போன அம்பையர் காட்டுரா மாதிரியே காட்டினான், கைய முறுக்கி வச்சி எக்கி ஒன்னு விட்டேன் பாரு அங்கிட்டு போய்  விழுந்த பய எந்திரிக்கவே இல்லை, எனக்குள்ள இப்படி ஒரு மாவிரானான்னு நானே நம்பலை,   

சரி நாம அடிச்ச அடியில எதிரிக்கு  நாக்கு தள்ளினதுல நாக்கவுட்டுல ஜெயிச்சாச்சு, கப்ப வாங்குனமா கடைக்கு போனமா கோர்ட்டார் அடிச்சிட்டு குப்புற படுத்தமான்னு இருக்கலாமுன்னு, என் பேர  வின்னரா அன்னவுன்ஸ் பண்ணுவானுங்கன்னு பார்த்தேன்,

ஆனா நான் தோத்துட்டேன்னு சொன்னதும் நான் அப்படியே ஒரு நிமிஷம் ஷாக்காயிட்டேன்,  என்னடா நடக்குது ஏண்டா அண்ணன் பெற சொல்லலைன்னு கேட்டப்பதான் சொன்னானுங்க நீ அடிச்சது ரெப்ரியடா அடிக்க வேண்டிய ஆளை இல்லைன்னு, அடப்பாவிங்களா இத ஏண்டா மொதல்லையே சொல்லலை அப்படின்னு போய்  பார்த்தா  அங்கே ரெப்ரி சட்டசபையில குத்து வாங்குன எம் எல் ஏ மாதிரியே கிடந்தார்,

சரி பாவம் மனுஷனை குமுறி இருக்கமேன்னு கேட்டேன் 

'யோவ் நீதான் ரெப்ரின்னு  சொல்லி தொலைய வேண்டியதானையா' அப்படின்னதுக்கு, 

அந்த ரெப்ரி சொன்னான்,

' எங்கடா சொல்ல விட்ட நீ வாயிலேயே வளைச்சி வளைச்சி குத்துற சரி சைகை காட்டுனாலும் வுட்டுடுவன்னு காட்டுனா கைய முறுக்கிட்டு முதுகுல குத்துற சொமாரி எதுக்க அவன் எரும மாதிரி நிக்கிறான் என் மேல குதிச்சி கும்மாளம் போடுற நீ, உனக்கு இங்க இல்லடா இனி எந்த கிக் பாக்சிங் போட்டியிலையும் சேத்துக்க கூடாதுன்னு'

 அந்த பீன்ஸ் சொல்லித்தொலைக்க இப்போ சும்மா இருக்க வேண்டியதாகி போச்சு, அப்படி இல்லைன்னு வச்சிக்க எத்தனை  ரெப்ரி வந்தாலும் வெரட்டி வெரட்டி அடிப்போம்ல, நானும் சாம்பியந்தான் வீட்ல வந்து பாரு எவ்வளவு கோப்பைய பாத்திரகடைலேர்ந்து வாங்கி வச்சிருக்கேன்னு , (  உண்மைய பேசிட்டனோ )


No comments:

Post a Comment